ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனை மாநகர சபை பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைத்து விட்டது. முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் தான் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபடி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்ள.. நிஸாம் காரியப்பரை மேயராக்கிப் அழகு பார்க்கும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீமும் வெற்றி பெற்றுக் கொண்டார்.
ஆனால், இனித்தான் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.. சிராஸ் மீராசாகிப் பதவி விலக வேண்டுமென்ற விடயத்தில் பலவேறு தரப்புகளிலும் பெரும்பாலும் ஒற்றுமைத் தன்மையே காணப்பட்டது. கட்சித் தலைமைக்கும் அளித்த வாக்குறுதிக்கும் கட்டுப்பட்டவராக அவர் நடந்து கொள்ள வேண்டுமென்ற விடயத்தில் பலரும் இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து இந்த விடயத்தை நியாயப்படுத்தியிருந்தனர்.

