Friday, November 22, 2013

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா... கர்ணா என்னை மன்னித்து அருள்வாயடா தம்பி..


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைத்து விட்டது. முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் தான் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபடி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்ள.. நிஸாம் காரியப்பரை மேயராக்கிப் அழகு பார்க்கும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீமும் வெற்றி பெற்றுக் கொண்டார். 

ஆனால், இனித்தான் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.. சிராஸ் மீராசாகிப் பதவி விலக வேண்டுமென்ற விடயத்தில் பலவேறு தரப்புகளிலும் பெரும்பாலும் ஒற்றுமைத் தன்மையே காணப்பட்டது. கட்சித் தலைமைக்கும் அளித்த வாக்குறுதிக்கும் கட்டுப்பட்டவராக அவர் நடந்து கொள்ள வேண்டுமென்ற விடயத்தில் பலரும் இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து இந்த விடயத்தை நியாயப்படுத்தியிருந்தனர்.

Sunday, November 10, 2013

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி.. ஒன்று.தெய்வத்தின் சாட்சியம்மா ..

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா  கடிதத்தினை கடந்த வெள்ளிக்கிழமை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம்  கையளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

சின்னதொரு பிரச்சினை இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பென்னம் பெரிதாக மாறியுள்ளது. கல்முனை மாநகர மேயர் சர்ச்சை இன்று மாபெரிய விடயமாகப் போய் அதன் விளைவுகள் அறைவடையாகிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளாமை, அல்லது திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதம் ஒன்றை ஜே. ஆர் பாணியில் பெற்றுக் கொள்ளாமை காரணமாக ஏற்பட்ட இழுபறியே இது.. யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். அது இப்போது ஹக்கீமுக்கும் தான் என்ற நிலை. அமைச்சர் ஹக்கீம் முன்னர் எத்தனையோ சூடுகளைக் கண்டு கொணடவர் ஆனால், மீண்டும்  அவர், அடுப்பங்கரைக்கே சென்றுள்ளார். தனது கட்சிக்காரர்களிலும் பேராளிகளிலும் அவர் இன்னும் கொண்டுள்ள அதீத நமபிக்கையே இதற்குக் காரணமாகலாம்.

Sunday, November 3, 2013

அரசியல் எரிதணலான அஷ்ரஃப் பிறந்த மண்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை விடயம் என்பது இன்று ஒரு மேஜர் விவகாரமாக மாறிவிட்டது. மேயர் சிராஸ் மீராசாகிபை பதவியிலிருநது இராஜினாமாச் செய்யுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்த தினத்திலிருந்து சேர் இந்த மாதம் 30 திகதி வரை கால அவகாசம் தாருங்கள் என சிராஸ்  அமைச்சரிடம் கேட்ட தினம் வரையான காலப் பகுதிக்குள் கல்முனையில் இடம்பெற்ற சமபவங்களானது தேசிய அரசியல் விவகாரம் போல் பேசவும் விமர்சிக்கவும்பட்டது.

கட்சியின் கட்டுக்கோப்பை மதித்து அவர் இராஜினாமாச் செய்வார் என்பது ஒரு பக்க நம்பிக்கையாகவும் இல்லை.. இல்லை.. அவர் ராஜினாமாச் செய்யமாட்டார் என்ற அதீத நம்பிக்கை இன்னொரு பக்கமுமாக காணப்பட்டது. இதற்கு மேலாக தனது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் அவதாவது, விசேடமாக சாய்ந்தமருது மக்களிடம் அபிப்பிராயம் கேட்டே இறுதி முடிவு என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.