- ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
அளுத்கமை, பேருவளை
பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்
பிரேரணை ஒன்றினை முன்வைப்பது குறித்து அண்மையில் கிழக்கு மாகாண சபையில் எழுந்த
பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சில வேளைகளில் பொதுபல சேனாவையும்
முஸ்லிம்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து சமாதானமாக அனைத்தையும் தீர்த்து
விடக் கூடியதாகவிருந்தாலும். கிழக்கு மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களிடையே இன்று
எழுந்துள்ள அமளிதுமளியான நிலைக்கு தீர்வு காண்பது கஷ்டம் போல் தெரிகிறது.
அளுத்கமை, பேருவளை
சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து
உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அனுமதி
கோரியிருந்த நிலையிலும் தவிசாளரால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த
விடயத்தில் தவிசாளர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே
அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.




















