Sunday, May 25, 2014

அறிந்தறிந்து செய்கின்ற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்!




                                                ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தேர்தல் ஒன்று வருகிறது என்பதற்காகவோ அல்லது உண்மையில் மன வேதனை காரணமாகவோ தெரியாது அமைச்சர் ரவுப் ஹக்கீம் பல விடயங்களை மனம் திறந்து அதுவும் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாகவே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

இவ்வாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் மட்டுமல்ல.. முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகளில் பலரும் சமூகம் சார்ந்த கருத்துகளையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் கருத்துகள், இவர்கள் காட்டும் சமூக அக்கறையில் முஸ்லிம் மக்கள் பெருவாரியான நம்பிக்கை கொண்டவர்களாக தற்போது இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பனை மரத்தின் கீழிலிருந்து பாலைக் குடித்தாலும் அதனைப் பால் தான் என்று நினைக்காத, நம்பாத ஒரு  நிமையையே முஸ்லிம்களிடம் இன்று காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவித்தவர்களும் சில முஸ்லிம் அரசில்வாதிகளே.

Wednesday, May 21, 2014

அறிக்கைகள் மட்டுமே ஆகப் போனது ஒன்றுமில்லை

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


தம்புள்ளை பள்ளிவாசல், அளுத்கமவில் கடை எரிப்பு, கம்பளையில் எதிர்ப்பு பேரணி இவைகள் மூன்றும் கடந்த முப்பது நாட்களுக்குள் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சம்பவங்கள். பிரித்தானியாவில் எதிர்ப்பு பேரணி நடத்தினாலும்  சரி, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாலும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்ற பாணியில் சிஙகள இனவாத அமைப்புகளினதும் சிங்கள இனவாத தனி நபர்களினதும் நடவடிக்கைகள் தொடர்கிறது. மறுபக்கத்தில் முஸ்லிம் தரப்புகளும் இவ்வறான செயல்கள் இடம்பெறும் போது மட்டும் உஷாரடைவதும் அறிக்கையிடவதும் பின்னர் வழமை நிலைக்கு திரும்புவதுமான நிலை. இவற்றினை மட்டுமே அவர்களால் செய்ய முடிகிறது.

முஸ்லிம் தரப்புகள் முடிந்தவற்றைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றுக்கான முடிவினை அவர்களால் காண முடியாது போகிறது. அரச தரப்பும் வாக்குறுதிகளை வழங்குக்கிறது. உடனடி நடவடிக்கை என்று கூறுகிறது. ஆனால், ஒன்று நடந்தபாடில்லை. இதுதான் உண்மை நிலைமை.

Sunday, May 11, 2014

அவசரமாக தவறினை செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மேல்!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, கல்முனை கரையோர மாவட்டம், அல்லது அதற்குப் பதிலீடான சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம். ஆகிய நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு ஆதரவளித்து கிழக்கு மாகாண சபையில் பங்கெடுத்துக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அன்றுதாம் முன்வைத்த இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இப்போது மீண்டும் ஒரு ஞாபகமூட்டலுக்கு வந்துள்ளது.

Saturday, May 3, 2014

அநியாயத்துக்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை! நியாயத்திற்கு இறைவன் கருணையே போதும்!!



 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென தனியான தென்கிழக்கு அலகு ஒன்று தேவையென்ற விடயத்தில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் மிகுந்த அக்கறையுடன் காணப்பட்டார் என்ற விடயம் அறிந்ததே. அவர் இறக்கும் வரை தென்கிழக்கு அலகு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றிருந்தார். இருப்பினும் அவரது மறைவினாலும் இணைந்த வடகிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டதாலும் இந்த தென்கிழக்கு என்ற விடயம் பெரிதாகப் பேசப்படாத ஒன்றாகவும் கைவிடப்பட்ட கோரிக்கையாகவும் இன்று மாற்றமடைந்து காணப்படுகிறது.