Sunday, April 21, 2013


ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ?

      கிழக்கு மாகாண சபை தூங்கி வழிகிறதா?


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இழுபறிகள், தாமதங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட இந்த மாகாண சபை தொடர்பில் அதிருப்தியான கருத்துகள் இப்போது உள்ளிருந்தே  வெளிப்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுகள் தற்போது சபையை ஆளுபவர் மீதே ஆளுந்தரப்பினராலேயே முன்வைக்கப்படுகின்றன. அதிலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் பெரும்பாலும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் தரப்பினர் பக்கமிருந்தே எழுந்துள்ளன.

Saturday, April 13, 2013

பெப்பிலியானவில் ஹராமும் பெவிலியனில் ஹக்கீமும்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


பெப்பிலியான பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. பொதுபல சேனா அமைப்பினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. குறித்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட வர்த்தகர் இந்த விடயத்தைக் கைவிட்டதன் காரணமாக இது தொடர்பான வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.
கிழக்கு வாழ் முஸ்லிம்களின் கடையடைப்பும் அஷ்ரபின் ஆயுதக் கொள்கலன் கண்டுபிடிப்பும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா உட்பட பல்வேறு அமைப்புகள் செயற்பட்டு வருவதனைக் கண்டித்து அண்மையில் ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் இது இடம்பெறுமென ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும் இறுதியில் சில மாவட்டங்களையும் சில பகுதிகளையும் மையப்படுத்தியதாக மட்டுமே இந்த ஒருநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
விசேடமாக, முஸிம்கள் செறிந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அன்றைய தினத்தின் வழமையான செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டிருந்தன. அதிலும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஹர்த்தால் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
அமைச்சர் ஹக்கீமின் அம்புலி மாமா கதை!
  
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

எமது சிறியபராயத்தில் நமது அம்மா, அப்பா எங்களை வீட்டுக்கு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக ஒரு சன்னியாசி கதை கூறுவார்கள், அதாவது, “அந்தா வாரன் சந்நியாசி, இந்தா வாரான் சந்நியாசி “ என்று கூறி எம்மைப் பயம் காட்டி வீட்டுக்குள் வைப்பார்கள். இந்தக் கதை இன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் இறுதி நிலையை ஞாபகப்படுத்துகிறது. நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது ஒரு சாராருக்கு கிடுகிடுப்பையும் இன்னொரு சாராருக்கு கிளுகிளுப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.
வென்றது இலங்கை! தோற்றது தமிழன்!!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
எமது சிறிய பராயத்தில் நமது அம்மா, அப்பா எங்களை வீட்டுக்கு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக ஒரு சன்னியாசி கதை கூறுவார்கள், அதாவது, “அந்தா வாரன் சந்நியாசி, இந்தா வாரான் சந்நியாசி “ என்று கூறி எம்மைப் பயம் காட்டி வீட்டுக்குள் வைப்பார்கள். இந்தக் கதை இன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் இறுதி நிலையை ஞாபகப்படுத்துகிறது. நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது ஒரு சாராருக்கு கிடுகிடுப்பையும் இன்னொரு சாராருக்கு கிளுகிளுப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.
வன்னியில் அமைதி காத்த அமெரிக்கா ஜெனீவாவில் வரிந்து கட்டியது ஏன்?

                                                                                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கைத் தூதுக் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளார். இவருடன் சென்ற ஏனையவர்கள் ஜெனீவாவில் தங்கியிருக்கும் நிலையிலேயே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். இருப்பினும் தான் மீண்டும் இம்மாதம் 15 ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப்  பேரவை அமர்வில் கலந்து கொண்ட பல நாடுகள் இலங்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தன. இவற்றுக்கு அவர் தனக்கு கழங்கப்பட்ட நேரத்துக்குள் பதிலளித்தாலும் மேலும் பல விடயங்களுக்கும் அவர் விளக்கமளிக வேண்டியுள்ளது. இதனை அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே இந்த இடைப்பட்ட ஓய்வு நாட்களில் இவைகள் குறித்து அரச தலைமையுடனும் உள்ளுர் அரசியல் ராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடி சில தயார்படுத்தலை அவர் மேற்கொள்ளவார் என நம்பலாம்.