ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ?
கிழக்கு மாகாண சபை தூங்கி வழிகிறதா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இழுபறிகள், தாமதங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட இந்த மாகாண சபை தொடர்பில் அதிருப்தியான கருத்துகள் இப்போது உள்ளிருந்தே வெளிப்படுத்தப்படுகிறது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுகள் தற்போது சபையை ஆளுபவர் மீதே ஆளுந்தரப்பினராலேயே முன்வைக்கப்படுகின்றன. அதிலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் பெரும்பாலும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் தரப்பினர் பக்கமிருந்தே எழுந்துள்ளன.




