Saturday, January 26, 2013


இலங்கை அரசின் தலைக்கு மேலால் தூக்குக் கயிற்றினை தொங்கவிட்டவர்கள் யார்?                                     
                                                                                                                  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வானது இலங்கையைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வானது இலங்கைக்கு மிகுந்த சோதனைமிக்கதாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் உள்ளுரில் மட்டுமல்ல.. சர்வதேசத்திலும் உணரப்பட்டுள்ளது. உலக வரைபடத்தின் ஒரு புள்ளியாகக் காணப்படும் இலங்கைத் தீவானது மார்ச் மாத ஜெனீவா பேரவை அமர்வில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடாகவே பேசப்படவுள்ளது.

Sunday, January 20, 2013


சரத் பொன்சேகாவின் தனிவழி அரசியலுக்கு துணை போவாரா ஷிராணி?

                                                                                                   ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கை அரசியலில் கடந்த சில மாதங்காளகச் சூடு பிடித்துக் காணப்பட்ட  ஒரு விடயம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பிரதம நீதியரசராகப் பதவி வகித்த ஷிராணி பண்டாரநாயக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் நீதித்துறையை மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றன என்பதனை இது எடுத்துக் காட்டினாலும் இந்தப் பதவி நீக்கமானது அரசியலமைப்புக்கு முரணானது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும்  அரசுக்குத் தலையிடியாகவிருந்த அல்லது தேவையாகவிருந்த ஒரு பிரச்சினைக்கு இப்போது முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயம் தொடர்ந்தும் பேசப்படப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.  இலங்கை அரசியலில் இவையெல்லாம் சாதாரண விடயங்கள்தான்.

Sunday, January 13, 2013

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிட்டாது

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகசபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது எவ்வித களைப்பும் இன்றி தொடர்ச்சியாகக் கூடி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குறுகிய காலத்துக்குள்ளேயே அது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துச் சாதனையே படைத்தது என்றும் கூறலாம்.

இவ்வாறானதொரு நிலையில் இன்னொரு பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் மீண்டும் பேசப்படுகிறது. தேசியப் பிரச்சினை என இலங்கை அரசினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழர் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது தொடர்பிலானதே அந்த நாடாளுமன்றக் குழுவாகும். சுமார் ஒரு வருட காலமாகப் பேசப்பட்ட இந்த விடயம், இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேறு சில நிகழ்வுகளால் மறக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் அதுதற்போது தூசு தட்டப்பட்டுள்ளது.

Thursday, January 10, 2013

வடபுல தமிழர் வேட்டை: அரசின் சிறை நிரப்புப் போராட்டம்
                                                                                                                                   
                                                                                                                                         ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



னி எந்தத் தமிழ் இளைஞனும் சயனைட் குப்பிகளைக் கழுத்தில் தொங்கவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியதான வழிகளை நாம் ஏற்படுத்துவோம்”. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இவை அவரால் இன்று நேற்றுத் தெரிவிக்கப்பட்டது அல்ல.. வன்னி யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தவையாகும்.

இது மட்டுமல்ல, இவ்வாறான பல கருத்துகளை ஜனாதிபதியும் அவரது அமைச்சரவை சகபாடிகளும் வெளியிட்டு வந்தனர். யுத்தம் முடிந்த பின்னரான வடக்கின் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இவர்களால் தெரிவிக்கப்பட்ட இவ்வாறான கருத்துகள் இன்று வெறும் வார்த்தைகள்தான் என்பதனை நிரூபிப்பது போன்ற சம்பவங்களே வடக்கு, கிழக்கில் விசேடமாக, யாழ். மாவட்டத்தில் இடம்பெறுகின்றன.