Sunday, February 23, 2014

அரசியல் அறுவைச் சிகிச்சைக்குள் அகப்பட்டுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, இல்லாத பிரச்சினைகளை எல்லாம் இழுத்துப் போட்டு தானும் குழம்பி மக்களையும் குழப்பும் சாதனைமிக்க அரசியல் களமாக இன்று கல்முனை மாறிவிட்டது. அனைத்தும் அரசியல் மயம். தான் செய்தால் சாதனை. மற்றவர் செய்தால் அது தனக்குச் வேதனை. என்ற நிலைவரமே கல்முனையில் காணப்படுகிறது. இளம் அரசியல் தலைமுறைகளால் அந்தத் தொகுதி பந்தாடப்படுகிறது.

அங்கொரு புதிய பிரச்சினை இன்று பூதாகரம் பெற்றுள்ளது. அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்போது சில அரசியல்வாதிகளின் அறுவைச் சிகிச்சைக் கூடமாக மாறிவிட்டது. மனிதாபிமானம், பொதுச்சேவை, தன்னார்வத் தொண்டு என்ற பண்புகளைக் கொண்ட வைத்தியசாலைகளிலும் இன்று அரசியல் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது. ஆனால் வேதனையானது.

Sunday, February 16, 2014

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டானுக்கு இரைச்சல் இலாபமே

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டு இரு வருடங்களாகின்ற நிலையில் அதன் இறுதிப் பகுதிக்கான புதிய முதலமைச்சர் யார் என்ற விடயம் இப்போது தூசு தட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணங்கிக் கொண்டதன் அடிப்படையில் தற்போதைய முதலமைச்சரின் காலம் இரண்டரை வருடம் என்ற நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பிலும் முன்னைய ஒப்பந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான்  இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாரா என்ற இரு விடயம் குறித்தும் பேசப்பகிறது.

Sunday, February 9, 2014

முஸ்லிம் காங்கிரஸின் பொதுத்தேர்தல் வியூகம் ஆப்பிழுத்த குரங்கின் கதையாக மாறிவிடுமோ?

                                                       ஏ. எச். சித்தீக்  காரியப்பர்

மேல், தென் மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி முடிவுற்ற நிலையில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுமென அறிவிப்பும் செய்யப்பட்டு விட்டது. இது தேர்தல்கள் காலம்தான். இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என்றெல்லாம் அடுத்த வருடம் வரை நீடித்துச் செல்லும் என்று கூறலாம்.

ஏதிர்வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத் தேர்தல் களம் தொடர்பில் சில அரசியல் கட்சிகள் இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டன. விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் சூடு கண்ட பூனையாக உள்ளது. இந்த விடயத்தில் அவர்கள் நின்று, நிதானித்தே வியூகம் அமைக்க வேண்டிய நிலைமை. இதன் காரணமாகவே இப்போதே மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியை கட்டியெழுப்பும் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.