ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, இல்லாத பிரச்சினைகளை எல்லாம் இழுத்துப் போட்டு தானும் குழம்பி மக்களையும் குழப்பும் சாதனைமிக்க அரசியல் களமாக இன்று கல்முனை மாறிவிட்டது. அனைத்தும் அரசியல் மயம். தான் செய்தால் சாதனை. மற்றவர் செய்தால் அது தனக்குச் வேதனை. என்ற நிலைவரமே கல்முனையில் காணப்படுகிறது. இளம் அரசியல் தலைமுறைகளால் அந்தத் தொகுதி பந்தாடப்படுகிறது.
அங்கொரு புதிய பிரச்சினை இன்று பூதாகரம் பெற்றுள்ளது. அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்போது சில அரசியல்வாதிகளின் அறுவைச் சிகிச்சைக் கூடமாக மாறிவிட்டது. மனிதாபிமானம், பொதுச்சேவை, தன்னார்வத் தொண்டு என்ற பண்புகளைக் கொண்ட வைத்தியசாலைகளிலும் இன்று அரசியல் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது. ஆனால் வேதனையானது.


