Sunday, January 26, 2014

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்! குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம் !!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மேல்மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் தனித்துக் களமிறங்குவது என்பது புதிய விடயமல்ல. பலமுறை களமிறங்கி தனது கட்சி உறுப்பினர்களை மேல்மாகாண சபைக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால,; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திடீரென மேல்மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை அந்தக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றிய பின்னர் அனைத்து இன மக்களையும் உள்ளீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இந்த அடிப்படையிலும் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காண்பிக்கவுமே இந்தக் கட்சி மேல்மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நம்பலாம்.

Sunday, January 19, 2014

ஊர் உண்டு பிச்சைக்கு.. குளம் உண்டு தண்ணீருக்கு... என்ற நிலை எப்போது கல்முனை அரசியலில் மாறும்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்­மு­னைக்கு இன்று பிடித்­துள்ள சனியன் இன்னும் கழிந்­த­பா­டில்லை. மேயர் பிரச்­சினை தீர்­வுடன் கெட்ட காலம் போய்­வி­டு­மென்றால் அது இப்­போதும் விட்­ட­பா­டில்லை. கல்­முனை இன்று அர­சியல் சது­ரங்க ஆடு­க­ள­மாக மாறிப் போய்­விட்­டது.இதன் கார­ண­மாக அந்தப் பிர­தேச மக்­கள்தான் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இப்­போது கல்­முனைத் தேர்தல் தொகு­தியில் அபி­வி­ருத்திப் பணிகள் என்­பது அறவே இல்­லாத ஒன்­றாகிப் போய் விட்­டன. முன்னாள் அமைச்­சர்­க­ளான ஏ. ஆர் மன்சூர் மற்றும் மர்ஹ_ம் எம். எச். எம். அஷ்ரஃப் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களே இன்று பெயர் சொல்லிப் பேசப்­ப­டு­கி­ன்றன. அவர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டங்­க­ளுக்கு வெள்­ளை­ய­டிப்­பதும் அவற்­றினைப் பழுது பார்ப்­ப­தும்தான் இன்று கல்­மு­னையில் இடம்­பெறும் மாபெ­ரிய அபி­வி­ருத்திப் பணிகள். புதி­தாக எந்தப் பணி­களும் அங்கு இல்லை. மன்­சூரின் ஓய்வின் பின்­னாலும் அமைச்சர் அஷ்­ரஃபின் மறைவின் பின்­னாலும் கல்­மு­னையும் இருண்டு விட்­டது.

Sunday, January 12, 2014

தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்....அரசியல்வாதிகளின் நடனமும்... அதிகார தரப்பினிரின் தாளமும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை. அது தொடர்கிறது. முன்னர் இடையிடையே இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் அப்போது பிரபல்யம் பெற்று பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது பரவலாக, தொடராக இடம்பெற்றாலும் அது தொடர்பான கவனம் பெரிதாக இல்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மட்டுமே அதன் பரபரப்பு. பின்னர் எல்லாம் மறந்து விடும் நிலை. இதான் இன்றைய நிலைப்பாடு.

Sunday, January 5, 2014

கரும்பைக் கடித்துப் பார்க்காமல் அது கசக்கும் என்று கூறுவதா?

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வியாழன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன்போது வடக்கில் மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்ட பின்னரான காலப் பகுதியில் நிர்வாக ரீதியாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில்  முதலமைச்சர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளார். எவ்வாறான பிரச்சினைகளை  சந்திக்கும் நிலைமையை தாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதனை நேரடியாகக் கூறியிருக்காவிடினும் அதனை ஜனாதிபதி உணர்ந்து கொண்டவராகவே இருப்பார்.

இந்தச் சந்திப்பைப் பொறுத்த வரையில் புதுவருட வாழ்த்துத் தெரிவிக்கும் சந்திப்பாக இருந்தாலும் ஜனாதிபதி இங்கு ஒரு குறைகேள் (ஒம்புஸ்டன்) அதிகாரி போன்றே செயற்பட்டிருக்கக் கூடும். ஏனெனில் வடமாகாண சபை நிர்வாக ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளே ஜனாதிபதியிடம் கூறப்பட்டுள்ளது.