Sunday, January 19, 2014

ஊர் உண்டு பிச்சைக்கு.. குளம் உண்டு தண்ணீருக்கு... என்ற நிலை எப்போது கல்முனை அரசியலில் மாறும்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்­மு­னைக்கு இன்று பிடித்­துள்ள சனியன் இன்னும் கழிந்­த­பா­டில்லை. மேயர் பிரச்­சினை தீர்­வுடன் கெட்ட காலம் போய்­வி­டு­மென்றால் அது இப்­போதும் விட்­ட­பா­டில்லை. கல்­முனை இன்று அர­சியல் சது­ரங்க ஆடு­க­ள­மாக மாறிப் போய்­விட்­டது.இதன் கார­ண­மாக அந்தப் பிர­தேச மக்­கள்தான் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இப்­போது கல்­முனைத் தேர்தல் தொகு­தியில் அபி­வி­ருத்திப் பணிகள் என்­பது அறவே இல்­லாத ஒன்­றாகிப் போய் விட்­டன. முன்னாள் அமைச்­சர்­க­ளான ஏ. ஆர் மன்சூர் மற்றும் மர்ஹ_ம் எம். எச். எம். அஷ்ரஃப் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களே இன்று பெயர் சொல்லிப் பேசப்­ப­டு­கி­ன்றன. அவர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டங்­க­ளுக்கு வெள்­ளை­ய­டிப்­பதும் அவற்­றினைப் பழுது பார்ப்­ப­தும்தான் இன்று கல்­மு­னையில் இடம்­பெறும் மாபெ­ரிய அபி­வி­ருத்திப் பணிகள். புதி­தாக எந்தப் பணி­களும் அங்கு இல்லை. மன்­சூரின் ஓய்வின் பின்­னாலும் அமைச்சர் அஷ்­ரஃபின் மறைவின் பின்­னாலும் கல்­மு­னையும் இருண்டு விட்­டது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்டை என வர்­ணிக்­கப்­படும் கல்­முனைத் தொகுதி இன்று அபி­வி­ருத்திப் பணி­களில் கோட்டை விட்டு விட்­டது. முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை முதல் முக்­கி­யஸ்­தர்கள் வரை­யானோர் இன்று இந்த தொகு­திக்கு பிர­தம அதி­தி­க­ளா­கவும் கௌரவ அதி­தி­க­ளா­கவும் வந்து சிறப்­பித்து விட்டுப் போகி­றார்­களே தவிரஇ வேறு எத­னையும் செய்­வ­தில்லை.. சிந்­திப்­ப­தில்லை. அந்த மக்கள் பிரச்­சி­னைகள்இ பிர­தேச அபி­வி­ருத்­திகள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்­து­வதே இல்லை.

கல்­முனைத் தொகு­தியின் அப்­பாவி முஸ்லிம் மக்­களும் தங்கள் தலை­வி­தியை நொந்து கொள்­கி­றார்­களே தவிரஇ அவர்­களால் அதற்­குமேல் ஒன்றும் செய்ய முடி­யாத நிலை. அமைச்சர் ஹக்கீம் தொகு­திக்கு வரா­விட்டால் இவர் என்ன தலைவர்..? அமைச்சர் அஷ்­ரஃப்தான் நம்ம தவைர் என்று கூறிக் கொள்ளும் இந்த மக்கள், ஹக்கீம் கல்­மு­னைக்கு வந்தால் போதும் “நீங்­கதான் எங்கள் தலைவர்” என்று கூறி பழை­ய­வற்­றை­யெல்லாம் மறந்து விடும் வஞ்­சகம் தெரி­யாத மக்கள் அவர்கள்.

கல்­முனைத் தொகு­திக்­கென்று இப்­போது ஒரே­யொரு முஸ்லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்தான். உள்ளார். அவர்தான் எச்.எம்.ஹாரீஸ் எம்.பி ஒரு­வ­ருக்கு வரு­டாந்தம் அர­சாங்கம் அளந்து போடும் நிதி­யி­லி­ருந்து அவர் கல்­மு­னையின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளுக்கும் கிள்ளிக் கொடுக்க வேண்­டிய நிலை. அந்தப் பணத்தைக் கொண்டு கட்­ட­டங்­க­ளுக்கு வெள்­ளை­ய­டிக்­கவும் வீதி­களின் ஓட்டை ஒடை­சல்­களை திருத்­த­வும்தான் முடி­கி­றது.

இது ஒரு புற­மி­ருக்க, அம்­பாறை மாவட்­டத்தில் இன்று எத்­த­னையோ முஸ்லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து அம்­பாறை மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­தியில் கூட கவனம் செலுத்­து­கி­றார்கள் இல்லை. கட்சி, அர­சியல் என்ற போட்­டி­களால் இந்த நிலைமை அந்த மாவட்­டத்தில் தோன்­றி­யுள்­ளது.

இன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஒட்­டு­மொத்த அபி­வி­ருத்­தி­யையும் நோக்கும்போது அம்­பாறை மாவட்ட அர­சி­யல்­வா­திகள் தலை­கு­னிய வேண்டும். அந்த மாவட்­டத்தின் வேறு­பட்ட அர­சியல் கட்­சி­க­ளையும் வேறு­பட்ட கொள்­கை­க­ளையும் கொண்ட அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அபி­வி­ருத்தி என்று வரும் போது ஒன்­றாகி விடு­கி­றார்கள். இந்த விட­யத்தில் அவர்கள் அர­சியல் இலாப, நஷ்டக் கணக்குப் பார்ப்­ப­தில்லை.

கடந்த வருடம் இடம்­பெற்ற மட்­டக்­க­ளப்பு மாவட்ட அபி­வி­ருத்தி தொடர்­பான கூட்­ட­மொ­ன்றில் அந்த மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளான ஹிஸ்­புல்லாஹ், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் உட்­ப­ட­லான பலர் ஒட்டு மொத்­த­மாக ஒதுக்­கிய நிதி எத்­த­னையோ மில்­லி­யன்­க­ளாக இருந்­தன. மிகவும் முரண்­பா­டான அர­சியல் களத்தைக் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லேயே அவர்கள் அபி­வி­ருத்தி மற்றும் மக்கள் நலன் என்­ப­ன­வற்றில் உடன்­பாடு கொண்டு இவ்­வாறு நடந்து கொண்­ட­தாக வெளி­யான செய்தி கூட புல்­ல­ரிக்கச் செய்­தி­ருந்­தது. அர­சி­ய­லுக்கு அப்பால் அவர்கள் இந்த விட­யத்தில் எவ்­வாறு செயற்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தனை நாம் ஒரு பாட­மாக ஏற்க வேண்டும்.

ஆனால்இ அம்­பாறை மாவட்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இந்த நிலை. உள்ளூர் அர­
சி­யல்­வா­திகள் முதல் தேசிய அர­சி­யல்­வா­திகள் வரை தங்­க­ளதும் மற்­ற­வர்­க­ளதும் ஒவ்­வொரு நகர்­வு­க­ளையும் அர­சியல் கண்­ணோட்­டத்தில் முன்­னெ­டுக்­கின்­றனர், பார்க்­கின்­றனர்.

அது மட்­டு­மின்றி தான் செய்­வதும் இல்லை செய்­ப­வனை விடு­வதும் இல்லை என்­றான வைக்கோல் போர் நாய்­களின் கதை­யா­கவே அம்­பாறை மாவட்ட முஸ்லிம் அர­சியல் களம் காணப்­ப­டு­கி­றது. யார் குத்­தி­னாலும் அரி­சி­யானால் சரி என்ற அர­சியல் நிலை அங்­கில்லை.

மத்­திய அரசின் அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள் விரும்பி கல்­முனைப் பிர­தே­சத்­துக்கு ஏதா­வது செய்­வோ­மென வந்­தாலும் விடு­கி­றார்கள் இல்லை. அவற்­றி­னையும் அர­சியல் கண்­ணோடு நோக்கி அவற்­றினைத் தடை செய்யும் அர­சி­யல்­வா­திகள் கூட இன்று கல்­மு­னையில் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்­ச­ரான எம்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் இவ்­வாறு தெரி­வித்த­தாகச் செய்­திகள் வெளி­வந்­தி­ருந்­தன.

“கல்­முனைத் தேர்தல் தொகுதி மக்­க­ளுக்கு சேவை­யாற்ற என்றும் நான் தயா­ராகவே இருக்­கின்றேன். கல்­முனைத் தொகு­தி­யி­லுள்ள அர­சி­யல்­வா­திகள் ஐக்­கி­யத்­துடன் செயற்­பட வேண்டும். அதன் மூலம் அங்கு விரை­வான அபி­வி­ருத்தியைக் காண­லா­மென தனது மன ஆதங்­கத்தை வெளி­யிட்­டி­ருந்தார் என செய்­திகள் வெளி­வந்­துள்­ளன.

ஹரீஸ் எம்.பியின் அழைப்பின் பேரில் கல்­மு­னைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஹிஸ்­புல்லாஹ்இ தனது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­ய­மைச்சின் ஊடாக கல்­மு­னையில் சில திட்­டங்­க­ளுக்­காகப் பல கோடி ரூபா­களை ஒதுக்க இணக்கம் தெரி­வித்த நிலை­யிலே பிர­தி­ய­மைச்­ச­ருக்கு இவ்­வா­றா­ன­தொரு மன உளைச்­சலை ஏற்­ப­டுத்தும் அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

யார் இவ்­வாறு நடந்து கொண்­டாலும் அதனை ஏற்றுக் கொள்­ளவே முடி­யாது. மத்­திய அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சினால் கூட கல்­மு­னையில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க முடி­யா­த­ள­வுக்கு ஒவ்­வொரு விட­யத்­துக்கும் அர­சியல் சாயம் பூசப்­படு­கி­றது என்­ப­த­னையே இதன் மூலம் உணரக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

ஹரீஸ் எம்­பியின் இந்தத் திட்டம் வெற்­றி­ய­ளித்தால் தங்­க­ளுக்­குள்ள குறைந்­த­ளவு செல்­வாக்கும் இல்­லாமல் போய்­விடும் என்று நினைக்கும் கூட்­டங்­களும் பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்லாஹ் நிதி ஒதுக்­கீட்டில் இவ்­வ­ளவு காரி­யங்­களும் நடந்தால் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்கு மங்கி விடும் நினைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட அரசியல்வாதிகளினாலுமே இன்று கல்முனைத் தொகுதி அனாதையாக நிற்கிறது. ஊர் உண்டு பிச்சைக்குஇ குளம் உண்டு தண்ணீருக்கு என்ற பழமொழி அண்மைக் கால கல்முனை அரசியலுக்குப் பொருத்தமானது புதிதாக ஒருவர் அரசியலில் இறங்கினால் அவர் பயப்பாடாமல் அம்பாறை மாவட்டத்துக்கோ அல்லது கல்முனைத் தொகுதிக்கோ சென்று 'வஞ்சனை அரசியல்” என்னும் பாடத்தைக் கட்டணம் செலுத்தாமலே கற்றுக் கொள்ள முடியும் என்பதே உண்மை.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. என்று பாரதியார் அன்று பாடி வைத்தது இவர்களுக்கும் பொருந்தும் போல்...

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 19-01-2014

No comments:

Post a Comment