Saturday, March 29, 2014

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக அமைந்து விடக் கூடாது



                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



சினிமாப் படமொன்றில் வரும்.. ஆனா வராது.. என்ற டயலொக் போன்று அண்மைக் காலமாகப் பேசப்பட்ட ஒரு விடயம் நடந்து முடிந்து விட்டது. கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் என்றெல்லாம் இதுவரை அழைக்கப்பட்டு வந்த சிராஸ் மீராசாகிப் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் சேர்ந்து  விட்டார். இது தொடர்பான வைபவம் கல்முனையில் கடந்த வாரம் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.

Sunday, March 23, 2014

வெண்ணெய் திரளும் வேளையில் பானையை உடைத்துவிடாதீர்கள்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் ஆர். பிரபாகனின் தரிசனம் என்ற நூலின் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள் இன்று சகல தரப்பினரினதும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு புத்தக வெளியீடுதானே என்று வழமையான நினைப்புடன் அங்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அங்கு இருவரால் ஆற்றப்பட்ட தங்களது இனம், சமூகம்,  தற்கால அரசியல் நிலைமைகள் சார்ந்த உரைகள் இன்று பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

Sunday, March 16, 2014

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போல பறக்கவும் வேண்டுமென்ற நிலை உருவாகக் கூடாது

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலிலும் சின்ன வீடு, பெரிய வீடு என்றதொரு பிரச்சினை எழுவது இன்று சர்வ சாதாரணமான விடயமாகி விட்டது. அதாவது கட்சியை விட்டு மாறுவதும் மீண்டும் அதில் சேருவதும் இலங்கை அரசியலில் அண்மைக்கால பாரம்பரியமாக போய்விட்டது.

கட்சிமாறிச் சென்ற சிலர் மீண்டும் தங்களது முன்னைய கட்சிகே வரும்போது தான் தனது தாய்க்கட்சிக்கே மீண்டும் வந்து விட்டேன் என்று சிலர் தங்களது போக்கை கௌரவமாக வர்ணித்துக் கொள்கின்றனர். தான் சார்ந்த கட்சியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இன்னொரு கட்சிக்கு மாறி விட்டு அந்தக் கட்சியினால் தான் பலவீனப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும்போது மீண்டும் தனது பழைய கட்சிக்கு தாவுவதற்காகக் கட்சியைப் பலப்படுத்தவே தாங்கள் மீண்டும் இணைந்து கொள்வதாக இன்னொரு சாரார் அறிக்கை விடுவர்.

Saturday, March 8, 2014

வடக்குப் பார்த்த மச்சு வீட்டை விட.. தெற்குப் பார்த்த குச்சு வீடே நல்லது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அதேவேளை சிறிலங்காவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது அரசின் தரப்பிலிருந்து எதிரான குரல்கள் எழுந்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மீது ஜனாதிபதி நொந்து  கொண்டமை தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன. அரசுடன் இருப்பதாயின் சரியாக இருந்து கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற தொனியில் ஹக்கீமைப் பார்த்து ஜனாதிபதி தெரிவித்தார் என செய்திகள் வெளிவந்திருந்தன.

Sunday, March 2, 2014

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுவதா இல்லையா? விரைவில் முடிவை அறவிப்பேன்! அமைச்சர் ரிஷாத்தை சந்தித்து பேசியது உண்மையே!!

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி-   பேட்டி கண்டவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை தரவைக்  கோவில் விவகாரம்  நான் மேயராக இருந்த காலத்திலும்  எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனை நான் மிக இரகசியமாக வைத்திருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருக்க வைப்பதால் இரு இன மக்களும் பாதிக்கப்படுவர். அது கல்முனை தொகுதியின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து விடலாம் என நான் உணர்ந்தேன். இதனடிப்படையில் இந்த விடயத்தை மிக நிதானமாகவே கையாள நான்  தீர்மானித்திருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து சுமூகமாகப் பேசித்த தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் துரமிர்ஷ்வசமாக பதவி விலகியதால் எதனையும் செய்ய முடியாதிருந்தது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு