Sunday, June 29, 2014

இராமனைப் போல் ராசா இருந்தால்தான் அனுமான் போல் சேவகனும் இருப்பான்!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அளுத்கமை, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரேரணை ஒன்றினை முன்வைப்பது குறித்து அண்மையில் கிழக்கு மாகாண சபையில் எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சில வேளைகளில் பொதுபல சேனாவையும் முஸ்லிம்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து சமாதானமாக அனைத்தையும் தீர்த்து விடக் கூடியதாகவிருந்தாலும். கிழக்கு மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களிடையே இன்று எழுந்துள்ள அமளிதுமளியான நிலைக்கு தீர்வு காண்பது கஷ்டம் போல் தெரிகிறது.

அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அனுமதி கோரியிருந்த நிலையிலும் தவிசாளரால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் தவிசாளர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

Sunday, June 22, 2014

சட்டமும் ஒழுங்கும் சிரித்துக் கொண்டிருந்த போது... அறியாமல் அழுது கொண்டிருந்த அளுத்கமை மக்கள்

ஏ.எச் .சித்தீக் காரியப்பர்
தமிழர்களுக்கு எதிரான 1983 ஜுலைக் கலவரத்தின் அகோரத்தை, அந்த இன சங்காரத்தை கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலத்தின் மேல் நின்று நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்த நினைவுகளையும் மியன்மார் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு பௌத்தர்கள் மேற்கொண்ட அநியாயங்கள் அக்கிரமங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து படித்த அண்மைக்கால ஞாபகங்களையும் கடந்த வாரம் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு மீட்டு விட்டது.
ஆயிரம், ஆயிரம் கோடிகள் நஷ்டம், மூன்று மனித உயிர்கள் பதறப் பதறப் பறிக்கப்பட்ட கொடூரம், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம். நூற்றுக்கணக்கில் வீடுகள்,  வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள்.

Saturday, June 7, 2014

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ? செல்லம்மா எந்தன் செல்லம்மா...

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கௌரவம் என்ற பழைய தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது.. நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?  காலம் மாறினால் கெளரவம் மாறுமா? அறிவை கொடுத்ததோ  துரோணரின் கெளரவம். அவர் மேல் தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம். நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்? நாளைய பாரதம் யாரதன் காரணம்? என்பதே அந்தப் பாடல் இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளார் போல் தெரிகிறது. மேற்சொன்ன பாடல் வரிகள் போன்ற நிலைமையே  இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளது.

Sunday, June 1, 2014

கடந்த சென்று விட்ட நேற்றைய நாள் இன்றைய நாளை பாழ்படுத்த கூடாது!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முகங்கொண்டு அதற்கான தீர்வினைக் காணும் விடயத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் அதன் அவசியம் குறித்தும் மீண்டும் இப்போது பேசப்படுகிறது. அதாவது, ஒரு கை ஒருபோதும் ஓசையைத் தராது. இரு கைகள் இணைந்தாலே சத்தம் வரும் என்பது போன்றதாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் கருக்கட்டத் தொடங்கியுள்ளது.