Sunday, December 29, 2013

அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து அழுதே ஆக வேண்டும்

ஏ.எச். சித்தீக்  காரியப்பர்
கல்முனை மாநகர சபை விவகாரம் சற்றுக் காலம் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் விழித்துக் கொண்டுள்ளது. மேயர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் எல்லாம் சரி. எனது பணியும் சரி என்று அமைச்சர் ஹக்கீம் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்கு முன்னராக, அவர் நாட்டுக்கு வெளியே உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் என்ற ஒன்றினால் அங்கும் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. ஹக்கீம் நாட்டில் இல்லாத போதுதான் அதிக விஷயங்கள் நடக்கின்றன என்பதற்கும் இதுவும் இன்னொரு சான்று.

கடந்த திங்கட்கிழமை கல்முனை மாநாகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், குறித்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற ஓர் அச்ச நிலையே. என்றாலும் மேயர் நிஸாம் காரியப்பர் சட்டத்தைக் காட்டி நிலைமையச் சமாளித்து தப்பித்துக் கொண்ட நிலையில் பிறிதொரு தினத்துக்கு அதனை ஒத்திவைத்து விட்டார். இருப்பினும் அன்று அங்கு நிலைமை மோசமாகவே காணப்பட்டுள்ளது. முன்னாள் மேயரும் அவருக்கு ஆதரவானவர்களும் விட்டபாடில்லை. வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பிரதிகளைக் கிழத்தெறித்து பேராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு கீழாகப் போயிருந்தது. பொலிஸார் அழைக்கப்பட்டே நிலைமை கட்டுக்குள் வந்தது.

Sunday, December 22, 2013

அடுப்பை ஊதுவதனைக் கண்டு சமைப்பதாக நினைக்கக் கூடாது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜப்பானின் இலங்கைக்கான விசேட  சமாதானத் தூதுவர் யசூசி அகாசி அண்மையில் வந்திருந்த போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவற்றையும் அவர் சந்தித்தார். அதன்போது சம்பந்தப்பட்ட அரசியல் தரப்புகள் தங்களது நிலைப்பாடுகள், குறைபாடுகள் தொடர்பில் அகாஸியிடம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

தாயிடம் ஒரு பொருளைக் கேட்டு அல்லது தனது விருப்பத்தைக் கூறி அந்தத் தாய் அதனைக் கொடுக்காமல் அல்லது விருப்பத்தை நிறைவேற்றாத நிலையில் தந்தை வீட்டுக்கு வந்ததும் தேம்பித்.. தேம்பி அழுது.. நாங்க கேட்டது ஒன்றையுமே அம்மா  செய்து தரவில்லை என பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல பலரும் அகாஸிடம் முறையிட்டிருந்தனர்.

Sunday, December 15, 2013

உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கின்ற நேரத்தில் அரிவாளுடன் வருவதா?

ஏ.எச். சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள் எழலாம் என்ற ஐயத்தின் மத்தியில் அவ்வாறானதொரு நிலை ஏற்படலாமலேயே வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது. இவ்வாறானதொரு ஐயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு மகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவரான ஜெமீல் சில விடயங்களைக் கூறி அவற்றினை நிறைவேற்றினால் மட்டுமே தாம் வரவு செலவுத் திடத்துக்கு ஆதரவளிப்போம் என முன்னர் கூறியிருந்தார். இந்த விடயமே அவ்வாறானதொரு ஐயத்தை தோற்றுவித்திருந்தது. ஆனால், இறுதியில் மின்னாமல் முழங்காமல் தங்களது ஆதரவையும் வழங்கி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்து விட்டது.

Friday, November 22, 2013

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா... கர்ணா என்னை மன்னித்து அருள்வாயடா தம்பி..


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைத்து விட்டது. முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் தான் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபடி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்ள.. நிஸாம் காரியப்பரை மேயராக்கிப் அழகு பார்க்கும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீமும் வெற்றி பெற்றுக் கொண்டார். 

ஆனால், இனித்தான் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.. சிராஸ் மீராசாகிப் பதவி விலக வேண்டுமென்ற விடயத்தில் பலவேறு தரப்புகளிலும் பெரும்பாலும் ஒற்றுமைத் தன்மையே காணப்பட்டது. கட்சித் தலைமைக்கும் அளித்த வாக்குறுதிக்கும் கட்டுப்பட்டவராக அவர் நடந்து கொள்ள வேண்டுமென்ற விடயத்தில் பலரும் இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து இந்த விடயத்தை நியாயப்படுத்தியிருந்தனர்.

Sunday, November 10, 2013

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி.. ஒன்று.தெய்வத்தின் சாட்சியம்மா ..

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா  கடிதத்தினை கடந்த வெள்ளிக்கிழமை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம்  கையளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

சின்னதொரு பிரச்சினை இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பென்னம் பெரிதாக மாறியுள்ளது. கல்முனை மாநகர மேயர் சர்ச்சை இன்று மாபெரிய விடயமாகப் போய் அதன் விளைவுகள் அறைவடையாகிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளாமை, அல்லது திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதம் ஒன்றை ஜே. ஆர் பாணியில் பெற்றுக் கொள்ளாமை காரணமாக ஏற்பட்ட இழுபறியே இது.. யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். அது இப்போது ஹக்கீமுக்கும் தான் என்ற நிலை. அமைச்சர் ஹக்கீம் முன்னர் எத்தனையோ சூடுகளைக் கண்டு கொணடவர் ஆனால், மீண்டும்  அவர், அடுப்பங்கரைக்கே சென்றுள்ளார். தனது கட்சிக்காரர்களிலும் பேராளிகளிலும் அவர் இன்னும் கொண்டுள்ள அதீத நமபிக்கையே இதற்குக் காரணமாகலாம்.

Sunday, November 3, 2013

அரசியல் எரிதணலான அஷ்ரஃப் பிறந்த மண்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை விடயம் என்பது இன்று ஒரு மேஜர் விவகாரமாக மாறிவிட்டது. மேயர் சிராஸ் மீராசாகிபை பதவியிலிருநது இராஜினாமாச் செய்யுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்த தினத்திலிருந்து சேர் இந்த மாதம் 30 திகதி வரை கால அவகாசம் தாருங்கள் என சிராஸ்  அமைச்சரிடம் கேட்ட தினம் வரையான காலப் பகுதிக்குள் கல்முனையில் இடம்பெற்ற சமபவங்களானது தேசிய அரசியல் விவகாரம் போல் பேசவும் விமர்சிக்கவும்பட்டது.

கட்சியின் கட்டுக்கோப்பை மதித்து அவர் இராஜினாமாச் செய்வார் என்பது ஒரு பக்க நம்பிக்கையாகவும் இல்லை.. இல்லை.. அவர் ராஜினாமாச் செய்யமாட்டார் என்ற அதீத நம்பிக்கை இன்னொரு பக்கமுமாக காணப்பட்டது. இதற்கு மேலாக தனது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் அவதாவது, விசேடமாக சாய்ந்தமருது மக்களிடம் அபிப்பிராயம் கேட்டே இறுதி முடிவு என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

Sunday, October 27, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? கூத்தமைப்பா??.. வடக்கில் தேசியமும் தியாகமும் வழங்கிய வெற்றியின் அறுவடை இதுதானா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை நிறுவி விட்டது. இன்று அதன் முன்பாக பாரிய பொறுப்புகள் உள்ளன. ஏனைய மாகாண சபைகள் போன்றல்லாது வடமாகாண சபைக்கு அதிக பணிகள் உள்ளன. முதன் முலாக வடக்கில் நிறுவப்பட்ட மாகாண ஆட்சி என்பதனால் அனைத்துப் பணிகளையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகச் செய்ய வேண்டிய கட்டாய நிலை அந்த மாகாண சபைக்கு உள்ளது.

இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள சக்திகளின் விமர்சனங்களையும் எதிர் அம்புகளையும் தாங்கிக் கொண்டே மறுபுறத்தில் மத்திய அரசின் கடுமையான பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய நிலை. இவை அனைத்துக்கும் மேலாக வடபுல மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டிய கட்டாய நிலை. தமிழ் மக்கள் தங்களை எதற்காக ஆட்சி பீடமேற்றினார்களோ அதனைப் புரிந்து கொண்டு பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை,  சர்வதேசத்தின் கழுகுப் பார்வையின் முன் களங்கம் ஏற்படாமல் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிதானம்.. இவைகள்தான் இன்று வட மாகாண சபையின் ஆட்சி நிர்வாக இயந்திரத்தின் சுழற்சி சக்கரங்களாக உள்ளன.

Sunday, October 20, 2013

அணில் விட்டும் மாங்காய் பறிக்கும் ரணில் முயற்சி தோற்றுப் போனது!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ரணில்...! இன்று அணில் விட்டும் மாழ்பழத்தைப் பறிக்க முடியாத ஒரு நிலையில் கட்சிக்குள் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் உள்ளவர்களே வெளியில் சென்று இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு இன்று எதிரிகளாகிப் போயுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவிக் காலம் குறித்து பின்னர் வரக் கூடிய சந்ததியினர் படிக்கப் போகும் வரலாறு என்பது எப்படியாக அமையும் என்பதனை இப்போதே கூற முடியாது நிலை! இன்னும் பிரச்சினைகள் முடியாத அத்தியாயங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Sunday, October 13, 2013

எ த்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே ...

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மர்ஹும் அமைச்சர் இருந்த காலத்தில் இந்தக் கட்சியின் பேரம் பேசும் சக்தி என்பது எவ்வாறானது என்பதனை முஸ்லிம்கள் மறந்து விடப்போவதில்லை. அஷ்ரஃபை அழைத்து இத்தனை அமைச்சுப் பதவிகள்.. இத்தனை பிரதியமைச்சுப் பதவிகள்.. இத்தனை அரச உயர்மட்ட பதவிகள் தருகிறோம் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க உதவுங்கள். அல்லது எமக்குப் பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள் என்றெல்லாம் தென்னிலங்கை அரசியல் சக்திகள் கெஞ்சி மன்றாடி அவரை கல்முனையிலிருந்து அரச செலவிலேயே ஹெலிக்கப்டரில் கொழும்புக்கு அழைத்து வந்த காலம் ஒன்று இருந்தது.

Sunday, October 6, 2013

கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியத்தால் அதிர்ந்து போயுள்ள தென்னிலங்கை!

.எச்.சித்தீக் காரியப்பர்
வடமாகாண சபைத் தேர்தலில் அரசு தரப்பு பாரிய தோல்வியைத் தழுவிய சில நாட்களுக்குள்ளேயே அது எதிர்பாராத இன்னொரு தோல்வியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டது.
வன்னிப் போரின் இறுதியான சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போதே இங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாடு திருமபிய அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததும் தாய் நாட்டின் மண்ணை முத்தமிட்டு வணங்கிய காட்சியினையும் யாரும் மறந்து விடப் போவதில்லை.

Sunday, July 28, 2013

அரிச்சந்திரனா? அரசியல் தந்திரனா? அமைச்சர் பஷீர் ஷேகுதாவூதே நிரூபிக்க வேண்டும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முஸ்லிம்களின் தனித்துவமிக்க கட்சியாகக் கூறப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் இந்தக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதனை விட வேட்பாளர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருப்பதனையே காண முடிகிறது. காரணம், வட மாகாணத்தில் இதன் செல்வாக்கு என்பது செல்லாக் காசு ஆகியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களுக்கு விசேடமாக, இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களைப் பராமுகமாக நடத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுடன் வடக்கு முஸ்லிம்களிடம் அமைச்சர் றிஷாதின் செல்வாக்கு அதிகரித்தும் காணப்படுகிறது. இவற்றின் காரணமாகவே  வேட்பாளர்களைத் தேடும் வேட்டைக்கு இந்தக் கட்சி தள்ளப்பட்டிருக்கலாம்.

Sunday, July 21, 2013

பேரினவாதிகளுக்குப் பேரிடி கொடுத்த கூட்டமைப்பு

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் இரு தரப்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழ் அரசியல் களம் சூடு பிடித்துக் காணப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் சிக்கலான தன்மையை ஏற்படுத்தியிருந்ததுடன் இந்த ஒரு காரணத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டுபட்டு விடுமோ என்ற கவலை தமிழ் மக்களிடம் விருப்பம் சிங்கள கடுங்கோட்பாளர்களிடமும் காணப்பட்டது.

Sunday, July 14, 2013

சொன்னாலும் வெட்கமடா.. சொல்லாவிட்டால் துக்கமடா…

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


முஸ்லிம் அரசியல்வாதிகளின் பலம், பலவீனங்கள் தொடர்பில் இப்போது பேசப்படுகிறது. அவர்கள் எந்த விடயத்தில் பலமாக உள்ளார்கள், எவ்வாறான விடயங்களில் பலவீனர்கள் என்று இப்போது நாடி பிடிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இவர்களின் பலம் எங்கு உள்ளது என்பதனை நன்கு அறிந்து வைத்து அதற்கேற்ப அவர்களுக்குத் தீனி வழங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது பலத்தை அவர்கள் தங்களது பதவிகளைப் பற்றிப் பிடிப்பதில் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றையவற்றில் அவர்கள் பலவீனர்களாகவே காணப்படுகின்றனர்.

Sunday, July 7, 2013

மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அந்தக் காலங்களில் எம். ஜி. ஆரும் நம்பியாரும் நடித்த திரைப்படம் ஒன்று திரைக்கு வரப்போகிறது என்றால் அந்தப்படம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு, எதிர்ப்பார்ப்பினைச் சொல்லவே தேவை இல்லை. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு இருக்கும். நம்பியாருக்கு எம்.ஜி ஆர் குத்து விடுவார். அதனுடன் நம்பியார் கதை சரி என்ற மகிழ்ச்சிகரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

Monday, July 1, 2013

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா


             ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

சபை தல்வரும்அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் 19 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக் குழுவுக்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

Sunday, June 16, 2013


ஜம்மியத்துல் உலமா சபையை  அரசியல்மயப்படுத்தும் முயற்சி?


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜம்மியத்துல் உலமா சபையை அரசியலுக்குள் சிக்க வைத்து அசிங்கப்படுத்தும் சில விடயங்கள் தற்போது அரங்கேறி வருவதாக தெரிய வருகிறது. முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலரே இதற்கு தூபமிடுவதாகவும் நம்பப்படுகிறது. பொதுபல சேனாவின் ஹலால், ஹராம் விடயம் சூடுபிடித்துக் காணப்பட்டபோது அதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜம்மியதுல் உலமா சபையை அரசியல்மயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அன்றைய முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.

இந்தநிலையில், இன்னொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த சில அரசியல்வாதிகள் தற்போது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு சாட்டாக வைத்து ஜம்மியத்துல் உலமா சபையையும் இந்த விடயத்துக்குள் இழுத்துப் போட்டு அதனை அரசியல்மயப்படுத்திய பின்னர் தங்களுக்கே உரித்தான பொறுப்புகளையும் அந்த அமைப்பின் தலையில் சுமத்தி விட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Sunday, June 9, 2013


பதின்மூன்றுக்கு பதில் மூன்று என்ன?
“ ஒய்யாரப் கொண்டையில் தாழம் பூவாம்  
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்”

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

‘தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடல்” என்ற உள்ளுர் பழமொழியானது இன்றைய அரசினைப் பொறுத்தவரை அதன் பிரதான உள்ளுர் ராஜ தந்திரமாகப் போயுள்ளது. தான் ஒரு விடயத்தைச் சாதிக்க வேண்டுமாயின் அதனை தனது ஆதரவுச் சக்திகள் மூலம் தூண்டி விட்டுத் தன்னை நல்ல பிள்ளையாக்கி நடித்துக் கொள்வதில் அபார திறமை கொண்ட அரசாங்கமாக இன்றைய அரசு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.

விசேடமாக, உள்ளுர் தமிழர் அரசியல்  தொடர்பிலேயே அதன் ராஜதந்திர நகர்வுகள் இந்தப் பழமொழியைக் ஒத்துக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணங்களாக மூன்று விடயங்களை இங்கே முன்வைக்க முடியும்.

Saturday, May 25, 2013

அமீர் அலிக்கு அரண்! பஷீர் சேகுதாவூதுக்கு முரண்!!
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

“சூரிய காந்தி“  படத்தில் வரும் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடலின் இடையில் இப்படி சில வரிகள் வருகின்றன. ” உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிலவும் கூட மிதிக்கும்” என்ற கவிஞர் கண்ணதாசனின் இந்த கருத்தாழமிக்க வரிகள் பொதுவான நிலைப்பாட்டையே சுட்டி நின்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதுக்கு பொருத்தமில்லாத வரிகளாகத்தான் இவை இருக்கும் என நம்பலாம்.

பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரச தலைமையினால் அழைத்துக் கொடுக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள  இந்த அமைச்சர் பதவியானது தன்னை மேலே தூக்கி விட்டு மக்கள் செல்வாக்கையும் மேன்மையையும் ஏற்படுத்தி விடும் என அவர் நினைத்திருந்தால் அந்த நினைப்பு தப்பானது என்பதனை அவர் இப்போது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவர் அரசியலின் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மதிக்கப்படாத, தனித்து விடப்பட்ட நிலைமையே இன்று காணப்படுகிறது.

Friday, May 10, 2013


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாடு: எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த மகாநாட்டினை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்டு விட்டது.

இந்த மகாநட்டை ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ்தான் பின்னணியில் நின்று நடத்தவிருந்தாலும் இலங்கையிலுள்ள சகல முஸ்லிம் கலை, இலக்கிய ஒன்றியம் ஒன்றை அமைத்து அதனூடாக நடத்துவது என அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மகாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினையில் அமைச்சர் றிஷாத் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு வன்னிப் போர் முடிவுற்ற பின்னர் வடபுலத்தில் இடம்பெற்று வரும் பல விரும்பத்தகாத சம்பவங்களுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்குத் தொடர்பிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழ் மக்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் மீள்குடியேற்றம், தமிழ் அகதிகள் மீள்குடியேற்றம், காணிப் பகிர்வு, காணிகள் ஆக்கிரமிப்பு, இந்திய வீடமைப்புத் திட்ட பங்கீடு, இறுதியாக முல்லைத்தீவில் தமிழ் மக்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டே வருகின்றன.

Sunday, April 21, 2013


ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ?

      கிழக்கு மாகாண சபை தூங்கி வழிகிறதா?


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இழுபறிகள், தாமதங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட இந்த மாகாண சபை தொடர்பில் அதிருப்தியான கருத்துகள் இப்போது உள்ளிருந்தே  வெளிப்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுகள் தற்போது சபையை ஆளுபவர் மீதே ஆளுந்தரப்பினராலேயே முன்வைக்கப்படுகின்றன. அதிலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் பெரும்பாலும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் தரப்பினர் பக்கமிருந்தே எழுந்துள்ளன.

Saturday, April 13, 2013

பெப்பிலியானவில் ஹராமும் பெவிலியனில் ஹக்கீமும்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


பெப்பிலியான பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. பொதுபல சேனா அமைப்பினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. குறித்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட வர்த்தகர் இந்த விடயத்தைக் கைவிட்டதன் காரணமாக இது தொடர்பான வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.
கிழக்கு வாழ் முஸ்லிம்களின் கடையடைப்பும் அஷ்ரபின் ஆயுதக் கொள்கலன் கண்டுபிடிப்பும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா உட்பட பல்வேறு அமைப்புகள் செயற்பட்டு வருவதனைக் கண்டித்து அண்மையில் ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் இது இடம்பெறுமென ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும் இறுதியில் சில மாவட்டங்களையும் சில பகுதிகளையும் மையப்படுத்தியதாக மட்டுமே இந்த ஒருநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
விசேடமாக, முஸிம்கள் செறிந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அன்றைய தினத்தின் வழமையான செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டிருந்தன. அதிலும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஹர்த்தால் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
அமைச்சர் ஹக்கீமின் அம்புலி மாமா கதை!
  
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

எமது சிறியபராயத்தில் நமது அம்மா, அப்பா எங்களை வீட்டுக்கு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக ஒரு சன்னியாசி கதை கூறுவார்கள், அதாவது, “அந்தா வாரன் சந்நியாசி, இந்தா வாரான் சந்நியாசி “ என்று கூறி எம்மைப் பயம் காட்டி வீட்டுக்குள் வைப்பார்கள். இந்தக் கதை இன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் இறுதி நிலையை ஞாபகப்படுத்துகிறது. நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது ஒரு சாராருக்கு கிடுகிடுப்பையும் இன்னொரு சாராருக்கு கிளுகிளுப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.
வென்றது இலங்கை! தோற்றது தமிழன்!!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
எமது சிறிய பராயத்தில் நமது அம்மா, அப்பா எங்களை வீட்டுக்கு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக ஒரு சன்னியாசி கதை கூறுவார்கள், அதாவது, “அந்தா வாரன் சந்நியாசி, இந்தா வாரான் சந்நியாசி “ என்று கூறி எம்மைப் பயம் காட்டி வீட்டுக்குள் வைப்பார்கள். இந்தக் கதை இன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் இறுதி நிலையை ஞாபகப்படுத்துகிறது. நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது ஒரு சாராருக்கு கிடுகிடுப்பையும் இன்னொரு சாராருக்கு கிளுகிளுப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.
வன்னியில் அமைதி காத்த அமெரிக்கா ஜெனீவாவில் வரிந்து கட்டியது ஏன்?

                                                                                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கைத் தூதுக் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளார். இவருடன் சென்ற ஏனையவர்கள் ஜெனீவாவில் தங்கியிருக்கும் நிலையிலேயே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். இருப்பினும் தான் மீண்டும் இம்மாதம் 15 ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப்  பேரவை அமர்வில் கலந்து கொண்ட பல நாடுகள் இலங்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தன. இவற்றுக்கு அவர் தனக்கு கழங்கப்பட்ட நேரத்துக்குள் பதிலளித்தாலும் மேலும் பல விடயங்களுக்கும் அவர் விளக்கமளிக வேண்டியுள்ளது. இதனை அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே இந்த இடைப்பட்ட ஓய்வு நாட்களில் இவைகள் குறித்து அரச தலைமையுடனும் உள்ளுர் அரசியல் ராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடி சில தயார்படுத்தலை அவர் மேற்கொள்ளவார் என நம்பலாம்.

Monday, March 4, 2013

குப்பை மேட்டுக் கோழிச் சண்டையில்முஸ்லிம்அரசியல் தலைமைகள்… பொதுபலசேனா Vs ஜம்மியத்துல்உலமா                                                                                                      ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஹலால் விவகாரம் தொடர்பில்  தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு ஜம்மியதுல் உலமா சபையானது தனது இறுதி முடிவைத் தெரிவித்து விட்டது. “இந்த ஹலால் விவகாரத்தை நாங்கள அரசாங்கத்திடமே ஒப்படைக்கிறோம். இனி அரசாங்கமே ஹலால் சான்றிதழ்களை வழங்கட்டும்” என்று கூறிவிட்டது. ஆரம்பத்தில் ஹலால் விடயத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றது ஜம்மியதுல் உலமாசபை. பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டும் விநியோகிப்போம் என்றது. இப்போது ஆளைவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டுள்ளது. ஆனால், பொதுபல சேனாவோ விடமாட்டோம் என்றுதெடர்ந்தும் ஒற்றைக் காலில் நிற்கிறது. அராசாங்கம் கூட இந்த வியடத்தைப் பொறுப்பேற்கத் தேவையில்லை. ஹலால் எமக்கு ஹராம் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது பொதுபலசேனா.

Friday, March 1, 2013


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:தெற்கை நோக்கிய சொற்கணைகள்
வடக்கில் எறிகணைகளாக விழுமா?      - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்




“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இவ்வாறான கூட்டணிகள், கூட்டமைப்புகள் உருவாவது புதிய வியடமல்ல. மிக அண்மைய காலத்தில் இரண்டு  கூட்டணிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நின்றபோது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியைக் களமிறக்குவதற்கென பெயரளவில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி கூட இடம்பெற்றிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் அல்லது சரத் பொன்சேகா தோல்வியடைந்ததும் இதன் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்ததனை அறிவோம். இறுதியாக, சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தியது தாம் செய்த மாபெரும் தவறு என ஐக்கிய தேசியக் கட்சிகைசேதப்பட்டு அறிக்கை விடும் அளவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணைந்ததுதவறான முடிவு என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்ததும் அறிந்தவைகளே.. ஆக, மொத்தத்தில் இந்தக் கூட்டமைப்பானது தேர்தலை முன்வைத்த ஒரு கூட்டாக இருந்ததே தவிர வேறெந்த நோக்கத்துக்காவும் அல்லவென்பதும் தெரிய வந்தது.

Friday, February 22, 2013

பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்
       ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ்ச் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த, முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது  சிறுபான்மையின முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த இனரீதியான அடக்குமுறை முஸ்லிம்களுக்கே என்பது பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கி விட்டது.


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுமே இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது.

Friday, February 15, 2013


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ஓர் அரசியல் புலனாய்வு
                                                
                                                                                                               
  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


உள்ளுர் அரசியலில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலேயே அதிகம் பேசப்பட்டு வருகிறது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகள், விவகாரங்கள் வெளியே வந்து நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்பவற்றை கட்சியின் ஆதரவாளர்கள் திரைப்படத்தில் வரும் திருப்பமான காட்சிகளை ஆதங்கத்துடன் எதிர்பார்ப்பது போன்று அவதானித்துக் கொண்டே உள்ளனர்.

பெரும்பாலும் முன்னர் இந்தக் கட்சியை அதன் ஆதரவாளர்களே அதிகளவில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலை வேறு. கட்சியின் போக்கையும் கட்சித் தலைமையின் செயற்பாடுகளையும் புறம் விட்டு விமர்சிக்காமல் முகத்துக்கு நேரே விமர்சிக்கும் நிலை கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. மு.காவுக்கு மீண்டும் இதுவும் ஒரு கெடு காலமோ தெரியவில்லை.

Monday, February 4, 2013

          இலங்கையின் கதவைத் தட்டிச் செய்தியைக் கூறிச் சென்ற அமெரிக்கா 

                                                          ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக இன்னொரு பிரேரணை அமெரிக்காவின் அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை தொடர்பாக முன்னர் வெளிவந்து செய்திகள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அமெரிக்காவே ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் இலங்கைகு விஜயம் மேற்கொண்டிருந்த அந்நாட்டின் உதவிச் செயலாளர்கள் மூவரும் இங்கேயே வைத்துத் தெரிவித்தமையாகும்.

Saturday, January 26, 2013


இலங்கை அரசின் தலைக்கு மேலால் தூக்குக் கயிற்றினை தொங்கவிட்டவர்கள் யார்?                                     
                                                                                                                  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வானது இலங்கையைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வானது இலங்கைக்கு மிகுந்த சோதனைமிக்கதாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் உள்ளுரில் மட்டுமல்ல.. சர்வதேசத்திலும் உணரப்பட்டுள்ளது. உலக வரைபடத்தின் ஒரு புள்ளியாகக் காணப்படும் இலங்கைத் தீவானது மார்ச் மாத ஜெனீவா பேரவை அமர்வில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடாகவே பேசப்படவுள்ளது.

Sunday, January 20, 2013


சரத் பொன்சேகாவின் தனிவழி அரசியலுக்கு துணை போவாரா ஷிராணி?

                                                                                                   ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கை அரசியலில் கடந்த சில மாதங்காளகச் சூடு பிடித்துக் காணப்பட்ட  ஒரு விடயம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பிரதம நீதியரசராகப் பதவி வகித்த ஷிராணி பண்டாரநாயக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் நீதித்துறையை மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றன என்பதனை இது எடுத்துக் காட்டினாலும் இந்தப் பதவி நீக்கமானது அரசியலமைப்புக்கு முரணானது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும்  அரசுக்குத் தலையிடியாகவிருந்த அல்லது தேவையாகவிருந்த ஒரு பிரச்சினைக்கு இப்போது முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயம் தொடர்ந்தும் பேசப்படப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.  இலங்கை அரசியலில் இவையெல்லாம் சாதாரண விடயங்கள்தான்.

Sunday, January 13, 2013

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிட்டாது

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகசபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது எவ்வித களைப்பும் இன்றி தொடர்ச்சியாகக் கூடி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குறுகிய காலத்துக்குள்ளேயே அது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துச் சாதனையே படைத்தது என்றும் கூறலாம்.

இவ்வாறானதொரு நிலையில் இன்னொரு பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் மீண்டும் பேசப்படுகிறது. தேசியப் பிரச்சினை என இலங்கை அரசினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழர் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது தொடர்பிலானதே அந்த நாடாளுமன்றக் குழுவாகும். சுமார் ஒரு வருட காலமாகப் பேசப்பட்ட இந்த விடயம், இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேறு சில நிகழ்வுகளால் மறக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் அதுதற்போது தூசு தட்டப்பட்டுள்ளது.

Thursday, January 10, 2013

வடபுல தமிழர் வேட்டை: அரசின் சிறை நிரப்புப் போராட்டம்
                                                                                                                                   
                                                                                                                                         ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



னி எந்தத் தமிழ் இளைஞனும் சயனைட் குப்பிகளைக் கழுத்தில் தொங்கவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியதான வழிகளை நாம் ஏற்படுத்துவோம்”. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இவை அவரால் இன்று நேற்றுத் தெரிவிக்கப்பட்டது அல்ல.. வன்னி யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தவையாகும்.

இது மட்டுமல்ல, இவ்வாறான பல கருத்துகளை ஜனாதிபதியும் அவரது அமைச்சரவை சகபாடிகளும் வெளியிட்டு வந்தனர். யுத்தம் முடிந்த பின்னரான வடக்கின் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இவர்களால் தெரிவிக்கப்பட்ட இவ்வாறான கருத்துகள் இன்று வெறும் வார்த்தைகள்தான் என்பதனை நிரூபிப்பது போன்ற சம்பவங்களே வடக்கு, கிழக்கில் விசேடமாக, யாழ். மாவட்டத்தில் இடம்பெறுகின்றன.