Sunday, October 27, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? கூத்தமைப்பா??.. வடக்கில் தேசியமும் தியாகமும் வழங்கிய வெற்றியின் அறுவடை இதுதானா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை நிறுவி விட்டது. இன்று அதன் முன்பாக பாரிய பொறுப்புகள் உள்ளன. ஏனைய மாகாண சபைகள் போன்றல்லாது வடமாகாண சபைக்கு அதிக பணிகள் உள்ளன. முதன் முலாக வடக்கில் நிறுவப்பட்ட மாகாண ஆட்சி என்பதனால் அனைத்துப் பணிகளையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகச் செய்ய வேண்டிய கட்டாய நிலை அந்த மாகாண சபைக்கு உள்ளது.

இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள சக்திகளின் விமர்சனங்களையும் எதிர் அம்புகளையும் தாங்கிக் கொண்டே மறுபுறத்தில் மத்திய அரசின் கடுமையான பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய நிலை. இவை அனைத்துக்கும் மேலாக வடபுல மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டிய கட்டாய நிலை. தமிழ் மக்கள் தங்களை எதற்காக ஆட்சி பீடமேற்றினார்களோ அதனைப் புரிந்து கொண்டு பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை,  சர்வதேசத்தின் கழுகுப் பார்வையின் முன் களங்கம் ஏற்படாமல் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிதானம்.. இவைகள்தான் இன்று வட மாகாண சபையின் ஆட்சி நிர்வாக இயந்திரத்தின் சுழற்சி சக்கரங்களாக உள்ளன.

Sunday, October 20, 2013

அணில் விட்டும் மாங்காய் பறிக்கும் ரணில் முயற்சி தோற்றுப் போனது!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ரணில்...! இன்று அணில் விட்டும் மாழ்பழத்தைப் பறிக்க முடியாத ஒரு நிலையில் கட்சிக்குள் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் உள்ளவர்களே வெளியில் சென்று இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு இன்று எதிரிகளாகிப் போயுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவிக் காலம் குறித்து பின்னர் வரக் கூடிய சந்ததியினர் படிக்கப் போகும் வரலாறு என்பது எப்படியாக அமையும் என்பதனை இப்போதே கூற முடியாது நிலை! இன்னும் பிரச்சினைகள் முடியாத அத்தியாயங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Sunday, October 13, 2013

எ த்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே ...

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மர்ஹும் அமைச்சர் இருந்த காலத்தில் இந்தக் கட்சியின் பேரம் பேசும் சக்தி என்பது எவ்வாறானது என்பதனை முஸ்லிம்கள் மறந்து விடப்போவதில்லை. அஷ்ரஃபை அழைத்து இத்தனை அமைச்சுப் பதவிகள்.. இத்தனை பிரதியமைச்சுப் பதவிகள்.. இத்தனை அரச உயர்மட்ட பதவிகள் தருகிறோம் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க உதவுங்கள். அல்லது எமக்குப் பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள் என்றெல்லாம் தென்னிலங்கை அரசியல் சக்திகள் கெஞ்சி மன்றாடி அவரை கல்முனையிலிருந்து அரச செலவிலேயே ஹெலிக்கப்டரில் கொழும்புக்கு அழைத்து வந்த காலம் ஒன்று இருந்தது.

Sunday, October 6, 2013

கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியத்தால் அதிர்ந்து போயுள்ள தென்னிலங்கை!

.எச்.சித்தீக் காரியப்பர்
வடமாகாண சபைத் தேர்தலில் அரசு தரப்பு பாரிய தோல்வியைத் தழுவிய சில நாட்களுக்குள்ளேயே அது எதிர்பாராத இன்னொரு தோல்வியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டது.
வன்னிப் போரின் இறுதியான சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போதே இங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாடு திருமபிய அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததும் தாய் நாட்டின் மண்ணை முத்தமிட்டு வணங்கிய காட்சியினையும் யாரும் மறந்து விடப் போவதில்லை.